Saturday 18 March 2023

அனுமதிப்பத்திரத்தில் மோசடி செய்து மணல் ஏற்றிய 08 சாரதிகள் கைது!

அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்மரையும் பொலிஸார் இன்று  செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் சோதனையிட்டபோதே இந்த மோசடி தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த டிப்பர் வாகனங்களை கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸார், அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்த குற்றத்தில் சாரதிகளையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *