Friday 17 March 2023

இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவில் கைது

இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சித்தமையினால் கைது செய்யப்பட்டு்ள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(5) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக கனடா செல்ல முயற்சி இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் சென்று, அங்கிருந்து கனடா செல்ல முயன்ற குற்றத்திற்காக 11 பேர் இந்தியாவின் கியூப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலுள்ள விடுதியொன்றில் இவர்கள் தங்கியிருப்பதாக கியூப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த மாதம் 19ஆம் திகதி விமானம் மூலம் சென்னைக்குச் சென்று அங்கிருந்து கேரளாவின் கடற்கரை நகரான கொள்ளம் பகுதிக்குச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மேலதிக விசாரணைகளை தமிழக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *