காதலன் என்ற போர்வையில் பாடசாலை மாணவியோடு பழகி,அவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒரு இளைஞன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் சம்பவம் குளியாப்பிட்டிய தென்னந்தோப்புக்குள் இடம் பெற்றுள்ளது.
காதலன் என்று கூறப்படும் அச் சந்தேக நபர் நேற்றுமுன்தினம் (20) கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலை மாணவியின் தாயார் கொடுத்த முறைப்பாட்டை தொடர்ந்து குளியாபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர், மாணவியை ஏமாற்றி குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பில் அமைந்துள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த மாணவி இதற்கு முன்னர் வேறு ஒருவரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பிலும் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.