Friday 17 March 2023

தொடருந்து நிலையம் ஒன்றில் பாரிய விபத்து ; மூவர் நிலை கவலைக்கிடம்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடருந்து நிலையம் ஒன்றில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து, மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைபெற்றறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்தின்போது, நடைபாதை மேம்பாலத்தினால் சென்றுகொண்டிருந்த சிலர் தொடருந்து தண்டவாளத்தில் விழுந்ததாக அங்கிருந்த ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக 13 பேர் நடைபாதை மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளதோடு, அவர்களுள் 6 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *