Friday 17 March 2023

பாணுக்கான விலையினை குறைக்க நடவடிக்கை

கோதுமை மா தொடர்பில் இன்றைய தினம்(05) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாணுக்கான தற்போதைய விலை தொடர்பில் இன்று(05) பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போதைய நிலைமையை சீர்செய்ய முடியுமெனவும் பாணுக்கான விலை தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டாமெனவும் இதன்போது தெரிவிக்க எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோதுமை மா தொடர்பில் கணக்கீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *