Friday 17 March 2023

பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதால் படுகாயமடைந்த குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த ஆ.அருள்குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்
இன்று மீண்டும் பிரான்ஸ் செல்லவிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வரணி – இடைக்குறிச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன்போது நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *