Friday 17 March 2023

முகக்கவசம் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் ; ஆளுநர் எச்சரிக்கை

நாட்டில் பரவலாக காற்றின் தரச்சுட்டெண் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளதால், வெளியில் செல்வோர் முக்கியமாக முகக்கவசத்தினை அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வளிமண்டலத்தில் தூசு அதிகரித்துள்ள நிலையில் இதய நோய் முதலிய பல நோய்கள் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் மிக அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *