ஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை பதவி விலகுமாறு கோரி கடந்த ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கொழும்பு கோட்டை ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் தமித அபேரத்ன நேற்று (7) மாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.